tamilnadu

img

மார்ச் 9-ல் சட்டமன்றம் கூடுகிறது

சென்னை,பிப்.26- தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் மார்ச் 9 ஆம் தேதியன்று கூடு கிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாம் நடைபெறுகிறது.  தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14 ஆம் தேதியன்று கூடியது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம்  2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட்  மீதான  விவாதங்கள்  மற்றும் பல்வேறு பிரச்ச னைகள் குறித்து விவாதங்கள் நடை பெற்றன. கடைசி நாள் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சார்பில்  வேளாண் மண்டல  பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு  நிறை வேற்றப்பட்டது.  தொடர்ந்து தமிழக சட்ட மன்றம்  தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். 

இந்நிலையில்  மார்ச் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடு கிறது என்றும் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் தமிழக சட்டமன்றச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.   இது தொடர்பாக சட்டமன்றச் செய லாளர் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டமன்றத்தின் அடுத்தக் கூட்டத்தை மார்ச்   9  திங்கள் கிழமையன்று காலை  10 மணிக்கு, தலைமைச் செயல கத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை  மண்டபத்தில்  பேரவைத் தலைவர்  கூட்டி யுள்ளார்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.