சென்னை,மார்ச் 11- கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல் 8 முதல் ஜூலை 1 வரை புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். ஏப்ரல் 9 முதல் ஜூலை 2 வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்தடையும்.