குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் மும்முனை தாக்குதலை எதிர்த்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகி வி.உமாமகேஸ்வரன், அய்யூர் ஜமாத் தலைவர் கே.அப்பாஸ், அலங்காநல்லூர் ஜமாத் தலைவர் எம்.ஜபருல்லாகான், பெரிய ஊர்சேரி ஜமாத் தலைவர் பெரிய ராவுத்தர், மலைப்பட்டி ஜமாத் தலைவர் கரந்தமலை ராவுத்தர், பூலாம்பட்டி ஜமாத் தலைவர் கொத்தன் ராவுத்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.மார்நாடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வ அரசு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.