கிருஷ்ணகிரி, ஏப்.7- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் விவசாயம் இல்லாத வறண்ட பூமியாகும். தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்பும் பகுதி. நிலமற்ற தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியுமாகும்.
குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியான சிங்காரப்பேட்டை வறுமையின் கோரப்பிடியில் உள்ள 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சியாகும். இப்பகுதி படித்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஓசூர், பெங்களுரு, மைசூர், மண்டியா உள்ளிட்ட தொழில் கேந்திர பகுதிகளில் குடும்பத்துடன் அங்கேயே தங்கி அத்துக் கூலிகளாக கட்டிடம் கட்டுதல், வண்ணம் பூசுதல் குழி தோண்டுதல், சித்தால் வேலைகள் செய்து வருகின்றனர். மாதம் ஒரு முறை சனி, ஞாயிறுகளில் சொந்த ஊருக்கு வந்து வீட்டை, அப்பா, அம்மா, உறவினர் களை பார்த்து விட்டு மீண்டும் வேலைக்கு திரும்பிச் சென்று விடுவார்கள். இந்நிலையில், மத்திய மாநில அரசுகளால் கொரோனா தடுப்பிற்கென திடீரென அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் மண்டியாவில் கூலி வேலை செய்து வந்த பல நூறு முறைசாரா தொழிலாளர் கள் கூலிப் பணம் கிடைக் காததாலும், வேலை தளங்க களில் தங்க ஏற்பாடு இல்லை. இதனால் சாப்பாட் டிற்கும் தங்குவதற்கும் வழி இல்லாமல் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.
இதில் மண்டியா மாவட்டம், மேல் கோட்டை வட்டம், பெலெகட்டா கிராமம் அருகில் 4 குழந்தைகள் உட்பட 16 பேர் (சிங்காரப் பேபேட்டை பகுதி மிட்டப் பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர்கள்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எத்திராஜ், வாலிபர் சங்க செயலாளர் தங்கபாலு, வெங்கடாசலம் ஆகியோரை கைபேசியில் தொடர்பு கொண்டனர். தங்களை உடனடியாக மீட்டு சிங்காரப்பேட்டைக்கு வந்து சேர உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோரிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மண்டிய மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் உதவியுடன் மீட்டு சிங்காரப் பேட்டைக்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டனர். சொந்த ஊருக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீட்க நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகளுக்கும், மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.