வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி
ஒகேனக்கல், ஜூன் 22- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வசித்து வரும் தொழிலாளர்களுக்கு நிவா ரணம் கேட்டு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இதை தொடர்ந்து திங்களன்று அதி காரிகள் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர் கள், மீன்பிடித் தொழிலாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் வசித்து வரும் நிலையில், தொடர்ந்து நான்கு மாதங்களாக அவர் களுக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தொழி லாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சார்பில் திங்களன்று (ஜூன் 2 2ஆம் தேதியன்று) ஒகேனக்கல்லில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.
இதைத்தொடர்ந்து பென்னாகரம் வட்டாட் சியர் சேது லிங்கம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர் தண்டபாணி ஆகியோர் சிஐடியு சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இப்பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் நாகராஜன், மாநிலக் குழு உறுப்பினர் கலாவதி, மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜ், ஒத்தப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், நிர்வாகி வரதன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நிவா ரணம் பெற்றுத் தருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து திங்களன்று (ஜூன் 22ஆம் தேதியன்று) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.