tamilnadu

img

இ-பாஸ் முறையை ரத்து செய்யக் கோரி வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 14- இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், சாலை வரியை டிசம்பர் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.14) தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி  வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

வடசென்னை

அதன் ஒரு பகுதியாக வடசென்னை யில் சென்னை பெருநகர மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் 7 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பத்தூர் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு தலைவர் சு.பாலுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்   மாவட்டத் தலைவர்  பி.என்.உண்ணி, பகுதி செயலாளர் ஏ.ராயப்பன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் சு.லெனின்சுந்தர், நிர்வாகிகள் டில்லி (எ) நாகராஜ், சேவி யர், சந்தானம், மாரி, மேகநாதன், நாரா யணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு பகுதி தலைவர் ஜாபர்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர் .ஜெயராமன், வேலு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். அயனாவரத்தில் பகுதி தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, ஏ.எல்.மனோகரன், ஏழு மலை, கொளத்தூர் மற்றும் பெரியார்  நகர் சுற்றுலா வாகன உரிமையா ளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் இந்திரன், செயலாளர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எழும்பூரில் பகுதி தலைவர் எஸ்.நாசர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. வட சென்னை மாவட்ட செயலாளர் சி.திரு வேட்டை, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பூரில் பகுதி தலைவர் டி.ஜெ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. வட சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், பகுதி செயலாளர் எம்.வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். தண்டையார்பேட்டையில் பகுதி  தலைவர் கே.சவுந்தர்ராஜன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ. டி.யு. மாவட்ட துணைத் தலைவர் ஆர். லோகநாதன், பகுதி செயலாளர் வெள்  ளைச்சாமி உள்ளிட்டோர் பேசினர். மாதவரத்தில் பகுதி தலைவர் எம். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகி கள் எம்.ஆனந்தன். கமலநாதன், பகுதி செயலாளர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை

தமிழ்நாடு கால்டாச்சி தொழி லாளர்கள் சங்கம் சார்பில் மாம்பலம்  வட்டாட்சியர் (கே.கே.நகர்) அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பூபதி, சைதாப்பேட்டை பகுதி டூரிஸ்ட் டாக்சி நிறுத்த செயலாளர் சதிஷ், தலை வர் முருகன் உள்ளிட்டோர் பேசினர். வேலூர் வேலூர் மாவட்ட சாலை போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சத்துவாச்சாரி ஆர்டிஓ அலு வலகம் அருகே மாவட்டத் தலைவர்  ஜி.கேசவன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்பி.ராமச் சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ். பரசுராமன், சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.பிரபாகரன், நிர்வாகிகள் அசோக், சதீஷ், ராமன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.