tamilnadu

img

உள்ளாட்சித்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

சென்னை,டிச.15- ஊரக உள்ளாட்சித் தேர்த லுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடை கிறது.  தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2  கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 9 அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. 6 நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்துள்ளன.  இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் தீவிர மடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்களன்று இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சி யினர் மற்றும் சுயேட்சை வேட்பா ளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 17 அன்று நடைபெறுகிறது.  வேட்பு மனுவை திரும்பப்பெற டிசம்பர் 19 கடைசி நாள் ஆகும். இதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படும்.