tamilnadu

img

‘‘நாளையிலிருந்து கவர்ன்மெண்ட் நடக்காட்டி பரவாயில்லையா?’’ - ஜிஜி

நாட்டு நடப்பு

அவசரமாக தன் இரண்டு சக்கர வாகனத்தில் அலுவலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கௌதமனை நடு ரோட்டில் திடீரென நான்கு காக்கி யூனிபார்ம் அணிந்த ஆயுதக் காவல்படை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். வழிமறித்த காவலர்களில் ஒருவர் சார்ஜெண்டின் முன்னால் கௌதமனையும் அவனுடன் வண்டியில் வந்தவரையும் பைக்கோடு நிறுத்தி ``சார் பில்லியன் ரைடிங்.’’ என்று சொல்லிவிட்டுப் போனார். தனக்கு முன்னால் இருந்த மூன்று நபர்களின் லைசென்சுகளை சரிபார்த்து அபராதம் போட்டுவிட்டு கௌதமனைப் பார்த்தார் சார்ஜெண்ட். அவரிடம், லைசென்ஸ்,  ஆர்.சி,  இன்சூரன்ஸ் பேப்பர்களை நீட்டினான் கௌதமன். எல்லாவற்றையும் சரிபார்த்த டிராபிக் சார்ஜெண்ட், ’’ஆயிரம் ரூபா அபராதம் கட்டுங்க.’’ என்று பில்லிங் மிஷினில் தொகைக்கான பட்டன்களை அழுத்த ஆரம்பித்தார்.

``சார் நிறுத்துங்க. எதுக்கு பைஃன் போடறீங்க? நான்தான் எல்லாத்தையும் காட்டிட்டேனே?’’ ``ஹெல்மெட் போடாம வந்திருக்கீங்களே சார்.’’ ``இதோ ஹெல்மெட். என் கையில இருக்கு. நான் ஹெல்மெட் போட்டுகிட்டுதான் வந்தேன்.’’  ``உங்களுக்கு இருக்கு சரி. அவருக்கு?’’ ``என்னது, பின்னாடி உட்கார்ந்து வர்றவங்களுக்கும் ஹெல்மெட் வேணுமா? இது எப்பத்துல இருந்து சார்?’’ ``அது ரெண்டு மூணு மாசமா போயிட்டிருக்கு. பேப்பர்லாம் பாக்கறதில்லீங்களா? பைஃன் கட்டித்தாங்க ஆகணும்.’’ என்றார் கண்டிப்புடன் சார்ஜெண்ட். ``சார், இவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவரு என் வண்டியில லிப்ட் கேட்டு வந்தவரு.’’  என்றான் கௌதமன். அதற்கு லிப்ட் கேட்டு வந்தவர், ’’ஏன் சார் இது மாதிரி லிப்ட் கொடுக்கற நல்லவங்க மனசுல நஞ்சை விதைக்கறீங்க? அந்த சந்துல இருந்து, இதோ முன்னாடி இருக்கற பஸ் ஸ்டாப்புக்குதான் லிப்ட் கேட்டேன்.  ஆடி கார்ல இந்த துhரத்துக்கு போனாக்கூட அவ்ளோ சார்ஜ் ஆவாது, ஒரு அம்பது ரூபா வேணா அபராதம் போடுங்க சார். கட்டிடறேன்.’’ என்று கூற அதைக்கேட்டு கடுப்பான சார்ஜண்ட், ’’என்னய்யா விளையாடுறீங்களா?  ஒழுங்கு மரியாதையா ஆயிரம் ரூபா பைஃன் கட்டுங்க இல்லாட்டி வண்டியை சீஸ் பண்ணிடுவேன்.’’ என்றார்.

``சார். என் வண்டிக்கு நான் சட்டப்படி லைசென்ஸ், ஆர்.சி., இன்சூரன்ஸ் எல்லாம் வச்சிருக்கேன். ஹெல்மெட்டும் போட்டிருக்கேன். எப்படி நீங்க என் பைக்கை சீஸ் பண்ணுவீங்க?  வேணா லிப்ட் கேட்டுவந்த அவரை சீஸ் பண்ணிக்கோங்க.’’ என்றான் கௌதமன். அதற்கு லிப்ட் கேட்டு வந்தவர், ``என்னை மட்டும் எப்படி சீஸ் பண்ணு வீங்க. எனக்கும் அந்த வண்டிக்கும் எந்த  சம்பந்தமும் கிடையாது. நான் ஹெல்மெட் போடலேன்னு எப்படி பைஃன் போடு வீங்க?’’ என்று சார்ஜெண்டிடம் கேட்க, ``நீங்க  ரெண்டுபேருமே பைஃன் கட்ட முடியா துன்னா, கோர்ட்டுக்கு வாங்க மேஜிஸ்டிரேட் யார் பைஃன் கட்டணும்னு சொல்வாரு’’ என்றவர் அடுத்த கேஸூக்கு போனார். ``கான்ஸ்டபிள் இது என்ன கேஸ்?’’ என்றார். ``இவரு சரக்கு போட்டுட்டு வண்டி ஓட்டிட்டு வந்தார் சார்.’’  ``ஓ. டிரங்க்-அண்ட்-டிரைவா?’’ என்றவர் குடிபோதை நபரிடம் ’’இதுக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? பத்தாயிரம்.’’ என்றார். ``தெரியும்.’’ என்றார் குடிகாரர். ``அப்ப பைஃன் கட்டிடுங்க.’’ ``பத்து பைசா கிடையாது.’’

``பைஃன் கட்டலேன்னா ஜெயிலுக்குத்தான் போகணும். பரவாயில்லியா?’’ ``நாளையில இருந்து கவர்மெண்ட் நடக்காது, பரவாயில்லியா?’’ என்று திருப்பிக்கேட்டார் குடிகாரர். ``ஏய்... குடிச்சுட்டா என்ன வேணாலும் உளருவியா?’’ ``நானா உளர்றேன். புள்ளிவிவரம் சார். புள்ளிவிவரம். இன்னிக்கு தமிழ்நாடு கவர்மெண்ட் எதுல ஓடுதுன்னு  தெரியாதா உங்களுக்கு?’’ ``...............................’’ ``இன்னாசார் சைலண்ட் ஆயிட்டே? நாங்க ஊத்தி குடிக்கலேன்னா கவர்ன்மெண்ட் ஊத்திக்கும் தெரியுமா? நான் கவர்ன்மெண்ட் நடக்கணுமேன்னு குடிச்சுட்டு போனா... நீ என்னையே அரெஸ்ட் பண்ணுவேங்கற. பண்ணிக்கோ.’’ என்றார். இந்தக் குடிகாரனிடம் பேசி மாளாது என்று முடிவு கட்டிய சார்ஜெண்ட், ’’சரி வண்டிக்கு லைசென்ஸ், ஆர்சி, இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கா?’’ ``எதுவும் கிடையாது. என் வண்டிக்கு அதெல்லாம் தேவையில்லை.’’ ``என்னய்யா திமிரா பேசறே? உன்னை கோர்ட்டுல கொண்டுபோய் விட்டாதான் சரிப்படுவே.’’ என்றார்.  

கோர்ட்டில் மாஜிஸ்டிரேட் சார்ஜெண்டைப் பார்த்து கேட்டார், ’’ஏங்க. பைக்குல பின்னாடி உட்கார்ந்து ஹெல்மெட் போடாம வர்றவங்களுக்கு எடுத்த உடனேயே ஏன் பைஃன் போடறீங்க? முதல்தடவை ஒரு எச்சரிக்கை கொடுக்கலாமே.’’ என்று கேட்க அதற்கு சார்ஜெண்ட் ’’அது வந்துங்கய்யா... அது வந்துங்கய்யா...’’ என்று இழுக்க, ``அய்யா... ஹெல்மெட் போடாம போனா  பாண்டிச்சேரில லட்டே குடுக்கறாங்க. இங்கே  அபராத ரசீதுகூட தமிழ்ல தர்ற மாட்டேங்க றாங்க’’ என்று ஒரு குரல் பின்னாடியிருந்து வந்தது. ``யார்யா அது?’’ என்று மேஜிஸ்டிரேட் கேட்டார். அதற்கு சார்ஜெண்ட், ’’அய்யா அது  டிரங்க் அண்ட் டிரைவ் கேஸூங்க.’’ என்றார். ``டிரங்க்-அண்ட்-டிரைவா. அவரை முன்னாடி வரச்சொல்லுங்க.’’ என்றார். ``என்னய்யா சவுண்ட் கொடுக்கறே? குடிச்சுட்டு வண்டி ஓட்டறது சட்டப்படி குற்றம்னு தெரியாதா உங்களுக்கு?’’ ``குத்தம்தான் மை லார்ட். அவங்களை முதல்ல டாஸ்மாக்கை மூடச் சொல்லுங்க. நான் குடிச்சுட்டு வண்டி ஓட்டறதை விட்டுடறேன்.’’ 

``அதை இந்த கோர்ட் தீர்மானிக்க முடியாது. அபராதத் தொகை ரூ.20 ஆயிரம் கட்டறீங்களா?’’ ``அவ்வளவு தொகையை நான் கண்ணாலக்கூட பாத்தது கிடையாது சாமி.’’ ``கட்டலேண்ணா வண்டியை சீஸ் பண்ணிடுவாங்க.’’ ``எது என் வண்டியையா?’’ என்று கேட்டுக்கொண்டே கோர்டுக்கு வெளியே சுவரோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை கோர்ட்டுக்குள் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினார் குடிகாரர். அதைப்பார்த்த மேஜிஸ்டிரேட் அதிர்ந்து போனார், ``என்னது. நீங்க குடிச்சுட்டு சைக்கிள்ல வந்ததுக்கா கேஸ்? போட்டிருக்காங்க? ஏங்க சார்ஜெண்ட், என்னங்க இது?’’ என்று கத்தினார். ``அய்யா ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுங்கய்யா என்ன வண்டின்னு தெரியா மயே ஆயுதப்படை காவலர் இவரை கூட்டிட்டு  வந்து என்கிட்டே விட்டுட்டார். நானும் பைஃன் போட்டுட்டேன்.’’

``சரி இது எப்போ உங்களுக்கு தெரிய வந்தது?’’ ``கோர்ட்டுக்கு வந்தபிறகுதான் தெரியும்.’’ ``சரி, அப்படி தெரிஞ்ச பிறகும் ஏன் அவர் மேல போட்ட கேசை நீக்கல.’’ ``அய்யா... அது வந்து... மாசத்துக்கு இவ்வளவு கேஸ் போடணும்னு எங்களுக்கு டார்கெட். இன்னிக்கி மாசக்கடைசி. அதனாலதான்...’’ என்று வழிந்தார். இடைமறித்த குடிகாரர் ``மை லார்ட்... தப்பு நடக்காம பாக்கறது இல்ல இவங்க  டார்கெட். துட்டு குறையாம பொதுமக்களிட மிருந்து ரவுண்டுகட்டி வசூலிக்கறதுதான்.’’ என்றார். குடித்துவிட்டு பேசினாலும் குடிகாரர் பேச்சு உண்மையாகவே தெரிந்தது மாஜிஸ்டி ரேட்டுக்கு. அவர் கௌதமனுக்கும் லிப்ட் கேட்டு வந்தவருக்கும் வார்னிங் மட்டும் கொடுத்துவிட்டு, குடிகாரரின் வழக்கை தள்ளுபடி செய்தார்.