tamilnadu

img

உயர்ந்த குழந்தை..!

அறிவில் சிறந்த குழந்தை பெற்றால்
 அதுவே வாழ்வின் பேரு!-அவர்
செறிவு மிக்கப் பண்பைப் பெற்றால் 
 சேராத் தீமை பாரு!

பெற்ற குழந்தைப் பொருளாய் ஆகும்
 பெற்றோர் கணக்கைப் பாரு!-அவர்
பெற்ற குழந்தைப் பொருளாய் ஆக 
 போற்றும் செயலில் சேரு! 
 
சிறந்த பொருளை அமிழ்தம் என்பார்
 சிறப்பின் மிகுதி யாலே!- குழவி
அருந்தும் உணவை அமிழ்த மென்பார்
 அளைந்து பிசைந்த தாலே!

பிள்ளைத் தழுவி உடலுக் கின்பம்
 பெறுவார் பெற்ற இறைகள்!-அவர்
கிள்ளை மொழியோ குழலை யாழை 
 கீழேத் தள்ளும் மறைகள்!

கல்வி தன்னில் சிறக்கச் செய்வார் 
 காணும் பெற்றோர் தானே!-அவர் 
நல்ல பெயரைக் காக்க அன்னை
 நன்றாய் மகிழ்வாள் மானே! 

என்ன தவத்தைச் செய்தான் இவனை 
 ஏற்ற பிள்ளை யாக!-மக்கள்
உன்னைப் போற்றும் பயனைத் தந்திடு
 உயர்ந்த குழந்தை யாக!