அறிவில் சிறந்த குழந்தை பெற்றால்
அதுவே வாழ்வின் பேரு!-அவர்
செறிவு மிக்கப் பண்பைப் பெற்றால்
சேராத் தீமை பாரு!
பெற்ற குழந்தைப் பொருளாய் ஆகும்
பெற்றோர் கணக்கைப் பாரு!-அவர்
பெற்ற குழந்தைப் பொருளாய் ஆக
போற்றும் செயலில் சேரு!
சிறந்த பொருளை அமிழ்தம் என்பார்
சிறப்பின் மிகுதி யாலே!- குழவி
அருந்தும் உணவை அமிழ்த மென்பார்
அளைந்து பிசைந்த தாலே!
பிள்ளைத் தழுவி உடலுக் கின்பம்
பெறுவார் பெற்ற இறைகள்!-அவர்
கிள்ளை மொழியோ குழலை யாழை
கீழேத் தள்ளும் மறைகள்!
கல்வி தன்னில் சிறக்கச் செய்வார்
காணும் பெற்றோர் தானே!-அவர்
நல்ல பெயரைக் காக்க அன்னை
நன்றாய் மகிழ்வாள் மானே!
என்ன தவத்தைச் செய்தான் இவனை
ஏற்ற பிள்ளை யாக!-மக்கள்
உன்னைப் போற்றும் பயனைத் தந்திடு
உயர்ந்த குழந்தை யாக!