தமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,371 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 5,117 பேர் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 6,12,320 பேர் குணமடைந்துள்ளனர்.