உத்தபிரதேசத்தில் கைகளை கழுவாமல் உணவை தொட்ட தலித் இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள டோகாட்டி கிராமத்தில் சனிக்கிழமை இரவு சமூக விருந்து நடைபெற்றது.
அப்போது நிலக்கரி கடையில் பணிபுரியும் 30 வயதான உபேந்திர ராம், தன் கடையிலிருந்து நேராக விழாவிற்கு வந்திருந்தார். அவரது கைகளில் நிலக்கரி கறை இருந்தது. ராம் தனக்காக உணவை எடுத்தவுடன், நான்கு இளைஞர்கள் அவர் கைகளை கழுவாமல் உணவை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நான்கு இளைஞர்களும் ராமை சூடான பாத்திரங்களால் தாக்கினர். ராம் தரையில் விழுந்த போது, ஒருவர் திரிசூலத்தால் அவரைத் தாக்கினார். தற்போது ராம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் எந்த புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவல்துறை இன்னும் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.