tamilnadu

img

தகவல் கேட்ட மனுதாரரிடம் குடியுரிமை சான்று கேட்ட லக்னோ பல்கலைக்கழகம்

நாடு முழுவதும் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிரான தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில்  அலோக் சாந்தியா என்பவர்  தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் மற்றும் சம்பளம் குறித்த தகவல்களை கேட்டிருந்தார்.  ஆனால் அது குறித்த தகவல்களை அளிக்க மறுத்த லக்னோ பல்கலைக் கழகம்  சாந்தியாவின் குடியுரிமை ஆதாரங்களைக் கேட்டது, அவர் பல்கலைக் கழக துணை வேந்தரிடம் புகார் அனுப்பியும் இவர் கேட்ட தகவல் கிடைக்க வில்லை. 
“இது பெரிய அதிர்ச்சி, ஆர்டிஐ சட்டத்தை பல்கலைக் கழகம் தன் சொந்த லாபங்களுக்காக திரித்துள்ளது. இவ்வாறு கேட்க இவர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை” என்று சாந்தியா தெரிவித்துள்ளார்.
சாந்தியா, சுயநிதிக் கல்வித்திட்டங்களுக்கான என்று தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் வினா எழுப்பியிருந்தார்.
“சில விண்ணப்பதாரர்கள் ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் அந்த விதியற்ற விதியே நடைமுறையாக முடியாது” என்கிறார் சாந்தியா.
பல்கலைக் கழகம் இது குறித்துக் கூறும்போது ஆர்டிஐ விண்ணப்பதாரர்களிடம் குடியுரிமை ஆதாரம் கேட்கும் பழக்கம் சில ஆண்டுகளாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.