புதுதில்லி
தமிழகத்தில் கோவில் கடைகளுக்கு தடைவிதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.