உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,மே 23- திமுக எம்.பி.க்கள் மீது மே 29 ஆம் தேதி வரை காவல்துறையினர் கடும் நட வடிக்கை எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியிருந் தது. அவர்கள் இருவரும், தங்களுக்கு எதிரான வன் கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசா ரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. நீதிபதி நிர்மல்குமார் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசா ரணையில், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர். பாலு ஆகியோர் மீது மே 29 ஆம் தேதி வரை காவல்துறையினர் கடும் நட வடிக்கை எடுக்க கூடாது. தற் போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.