உக்ரைன் நாட்டில் பயிற்சி ராணுவ விமானப்படை விமானம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
அன்டோனோவ் 26 என்ற போக்குவரத்து விமானம் ரயிவே பயிற்சி வீரர்கள் 20 பேரையும், 7 பணியாளர்களை அழைத்து சென்றுள்ளது. வெள்ளியன்று கார்கிங் அருகே உள்ள சுகுவிவ் ராணுவ தளத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது. சனிக்கிழமையன்று விமானத்தின் எறிந்த பாகங்களையும், சலங்களையும் கண்டுபிடித்து வருகிறார்கள். இதில், 23 பேர் இருந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தேடப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
விபத்து குறித்து அந்நாட்டு ராணுவம் விசாரித்து வருகிறார்கள். பயிற்சி விமானம் என கூறிய நிலையில், தேசிய விமானப்படை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விமானத்தை இயக்க வில்லை. விமானத்தில் அதிகாரி ஒருவர் இயந்திர செயலிழப்பை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஏழு நிமிடங்கள் கழித்து விமானம் தரையில் மோதியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி தரன், "விமானம் அதன் இறக்கைகள் தரையில் சிக்கியிருக்கலாம்" என்றும் அதற்குப் பிறகு தீப்பிடித்ததாகவும் கூறியுள்ளார். விமான ரெக்கார்டர் (கருப்பு பேட்டி) இப்போது விமானத்தில் உள்ளது, அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை ஆராய்ந்த பின்னர், முடிவுகளை எடுக்க முடியும்" என்று கூறியுள்ளார். விமானத்தின் உடல் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. ஆனால், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர்.
முன்னதாக இந்த விபத்து ஒரு "பயங்கரமான சோகம்" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சனிக்கிழமை கூறியுள்ளார்.
வடகிழக்கில் ரஷ்யாவின் எல்லையாக இருக்கும் இப்பகுதி சனிக்கிழமை துக்க தினமாக அறிவித்துள்ளது.