ஈரோடு, செப். 21- மழைநீர் சேகரிப்பு குறித்த ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஒளிரும் ஈரோடு அமைப்பின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சனி யன்று சிடி ஹாலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் எம்.சின்ன சாமி வரவேற்று பேசினார். பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் மூத்த விஞ்ஞானியாக பணி யாற்றி வருபரும், பல மாநில அரசுகளுக்கு மழைநீர் சேகரிப்பு ஆலோசகராகவும் உள்ள ஏ.ஆர்.சிவகுமார் மழைநீரை எளிய மற்றும் சிக்கனமான வழியில் சேகரிக்கும் முறைகள், நிலத்தடி நீர் மேம்பாட்டு முறை கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் துணை தலைவர் டி.வெங்கடேஸ்வரன், அறங்காவலர் ஆர்.ஜி. சுந்தரம் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.