tamilnadu

வீட்டு வசதிப்‌ பிரிவு அலுவலகம்‌ இடமாற்றம்

ஈரோடு, ஜன 2- ஈரோடு மாவட்டம்‌,  சூரம்பட்டி நால் ரோடில் செயல்பட்டு வந்த  வீட்டு வசதிப்‌  பிரிவு அலுவலகம்‌ இடமாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாவட்டம்‌,  சூரம்பட்டி நால்ரோடு இ.வி.என்‌. சாலையில்‌  அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம்‌, ஜனவரி  2 ஆம் தேதி (வியாழன்) முதல்‌ சமுதாயக்‌ கூட கட்டிடம்‌, ஈரோடு கேஸ்‌ ஏஜென்சீஸ்‌ அருகில்‌, சம்பத்‌ நகர்‌ மெயின்‌ ரோடு, ஈரோடு  மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ அஞ்சல்‌, ஈரோடு- 638 011 என்ற முகவரியில்‌ செயல் பட உள்ளது. எனவே அனைத்து ஒதுக்கீடு தாரர்களும்‌, பொதுமக்களும்‌ ஈரோடு வீட்டு வசதிப்‌ பிரிவு அலுவலகத்தினை இனி  மேற்கண்ட முகவரில் தொடர்பு கொள்ள லாம் என தெரிவித்துள்ளார்.

;