tamilnadu

img

ஈரோட்டிற்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

ஈரோட்டில்,டிசம்பர்.20- ஈரோடு மாவட்டத்திற்கு புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற நலத்திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கான நலத்திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

  • ஈரோட்டில் விரைவில் ஐடி பார்க் அமைக்கப்படும் .
  • ஈரோடு மாநகராட்சிகளில் உள்ள சாலைகள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
  • அந்தியூர் கத்திரி மலைப் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில், ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மின் இணைப்பு வசதி வழங்கப்படும்.
  • சென்னி மலை, சத்தியமங்கலம், நம்பியூர், பவானி சாகர் ஒன்றியங்களுக்கு உட்படக் கிராமங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். போன்ற நலத்திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.