tamilnadu

img

புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு, செப்.26- புன்செய் புளியம்பட்டி விடி யல் சமூக நல அறக்கட்டளை மற் றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் 2 ஆயிரம் மாணவி யர்கள் ஒரே நேரத்தில் புத்தகம் வாசிக்கும் “புளியம்பட்டி வாசிக் கிறது” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.  இளைய தலைமுறையின ரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஆண்டு தோறும் விடியல் சமூகநல அறக் கட்டளை சார்பில் புன்செய் புளி யம்பட்டியில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 8  ஆவது ஆண்டாக புத்தக திருவிழா  வருகின்ற அக்டோபர் 16 முதல் 20 வரை ஐந்து நாட்கள் நக ராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட் சியில் 20க்கும் மேற்பட்ட முன் னணி பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்கி றார்கள். பல்வேறு தலைப்புக ளில் லட்சக்கணக்கான புத்த கங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.  கண்காட்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். அனைத்து புத்தகத்திற்கும் 10 சத விகித சிறப்பு தள்ளுபடி வழங் கப்படுகின்றன.  மேலும், நாள்தோறும் மாலை 6  மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள், சிந்தனை யாளர்கள் பங்குபெறும் மாலை நேர கருத்தரங்குகள் நடைபெற இருக்கின்றன.   இந்நிலையில், இந்த புத்தக திருவிழா குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தவும், மாணவ, மாணவியர் கள் இடையே புத்தகம் வாசிப்ப தன் அவசியத்தை வலியுறுத்தியும் “புளியம்பட்டி வாசிக்கிறது “  என்ற நிகழ்ச்சி செவ்வாயன்று அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. இதில்  2 ஆயிரம்  மாணவியர்கள் ஒரே நேரத்தில் புத்தக வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர். மேலும் புத்தகத்தை வாசிப்போம் வாழ்க்கையை நேசிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.  இந்நிகழ்ச்சியில் விடியல் அறக்கட்டளை தலைவர் வாணி தருமராசு, செயலாளர் எஸ்.ஜெய காந்தன் மற்றும்  ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.