சென்னை,ஜூலை 31- தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தனி மாவட்டங்களாக சட்டப்பேரவையில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இரு மாவட்டங்களுக்குக்கும் சிறப்பு ஐ.ஏ.எஸ் அதி காரிகளை நியமித்து கடந்த 26 ஆம் தேதி அறி விப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி செங் கல்பட்டு மாவட்டத்திற்கு ஜி.கே.அருண் சுந்தர் தயா ளனும், தென்காசி மாவட்டத்திற்கு ஜான் லூயிசும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சி யர்கள் நியமிக்கப்படும் வரை சிறப்பு அதிகாரி கள் அந்தந்த மாவட்ட வருவாய் நிர்வாக ஆணை யர்களோடு இணைந்து செயல்படுவார்கள் என்றும், புதிய மாவட்டங்களுக்கான எல்லை களை பிரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜி.கே.அருண் சுந்தர் தயா ளனை செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து தென் காசி மாவட்டத்துக்கும், ஏ.ஜான் லூயிசை தென் காசியிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.