tamilnadu

img

செங்கல்பட்டு,தென்காசிக்கு தனி அதிகாரிகள் நியமனம்

சென்னை,ஜூலை27- புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தற்காலிக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டையும் நெல்லையைப் பிரித்து தென்காசியையும் தனி மாவட்ட மாக தமிழக அரசு கடந்த 18ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் இந்த மாவட்டங்களை உருவாக்கும் பணிக்காக 2 தற்காலிக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி சர்க்கரை கூடுதல் இயக்குநராக இருந்த அருண்சுந்தர் தயாளன் செங்கல்பட்டு மாவட்டத்துக்கும் தமிழ்நாடு கடல்வாரிய துணை சேர்மனும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்த ஜான் லூயிஸ் தென்காசி மாவட்டத்துக்கும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.