சென்னையில் நடைபெற்ற தென் மாநில மாநாட்டின் போது, மக்களவைத் தேர்தல்கள் தொடர்பாக பேராசிரியர் அருணன் எழுதி குமுதம் ரிப்போட்டர் இதழில்வந்த கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய ‘ஒரு விரல் புரட்சி’என்ற நூல் வெளியிடப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகநயினார் பெற்றுக் கொண்டார்.
சென்னை, நவ.6 - தாய்மொழி பாதுகாப்பு என்ற ஆயு தத்தால் இந்தி திணிப்பை தகர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் செவ்வா யன்று (நவ.5) சென்னையில் “தாய் மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு” எழுச்சியுடன் நடைபெற்றது.இதில் தலைமையேற்று அவர் பேசியதாவது: மத்திய பாஜக அரசு நாட்டின் பொரு ளாதாரத்தை நாசப்படுத்திக் கொண்டி ருக்கிறது. அதை எதிர்த்து உறுதியுடன் போராடுவது இடதுசாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியும்தான். கலாச்சாரத்துறையிலே இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு என்ற ஆயு தத்தை அவர்கள் கையிலெடுக்கிற போது, நாம் தாய் மொழி பாதுகாப்பு என்ற முழக்க த்தை கையிலெடுத்திருக்கிறோம். ஒருபுறம் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்; மறுபுறம் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றில் பாஜக மேற்கொள்ளும் பழமைவாதத்திற்கு எதிரான போராட்டம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா இல்லை
மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் இந்தியாவில் இடதுசாரிகளுக்கு இனி எதிர் காலம் இருக்குமா என்று சிலர் எழுதி னார்கள். இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா இல்லை என்று அவர்கள் மாற்றி எழுத வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இந்தி யாவிற்கு எப்போதெல்லாம் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தேசத்தைக் காப்பாற்றுகிறவர்களாக களத்திலே இறங்கி போராடியவர்கள் கம்யூ னிஸ்டுகள் என்பதுதான் வரலாறு. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழு சுதந்திரம் கேட்கத் தயங்கிய போது முழு சுதந்திரம் வேண்டும் என்று முதலில் முழங்கி யவர்கள் கம்யூனிஸ்டுகள். நாடு விடுதலை அடைந்த பிறகு எப்படிப்பட்ட நிர்வாக அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்த போது, மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் கம்யூ னிஸ்டுகள்.
இந்தி திணிப்பு என்பது ஒரு மொழித் திணிப்பு மட்டுமல்ல; மாநிலங்களை அழிப்ப தற்கான ஒரு பகுதியாக அதைப் பார்க்க வேண்டும். ஒரே ஒரு உத்தரவிலே காஷ்மீரை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டார்கள். இவர்கள் இந்தியாவை, தமிழகத்தை புரட்டிப் போட எவ்வளவு நேரம் ஆகும்? தேசம் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்கி யிருக்கிறது. 13 மொழிகளை, 11 மொழி களை, 4 மொழிகளை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகள் உள்ளன. தேசிய கீதங் களை தாய் மொழியிலேயே பாடுகின்றனர். இவையெல்லாம் மோடிக்கும், அமித்ஷா வுக்கும் தெரியாதா?
அரசியலமைப்புச் சட்டத்தின் 17ஆவது அட்டவணையில்- 343ஆவது பிரிவில் நாட்டின் நிர்வாக மொழி, அலுவல் மொழி இந்தி மட்டுமே என்று கூறப்பட்டுள்ளது. எனவே 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக சமமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மாநாடு.
இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய ஒரு பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு. மொழித் திணிப்புக்கு எதிராக ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய பெருமை உண்டு. இந்தி திணிப்புக்கு எதிராக போராடி யதில் திராவிட இயக்கங்களின் பங்கு குறிப் பிடத்தக்கது. அதே வேளையில், இந்திக்கு பதிலாக ஆங்கிலம் இருக்கிறதே, அந்த இடத்தில் தமிழ் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மழலையர் பள்ளியில் கூட இன்று தமிழ் கிடையாது. 60 விழுக்காடு மாண வர்கள் பயிலக் கூடிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் இல்லை. அந்தந்த மாநில உயர்நீதி மன்றங்களில் அவரவர் தாய்மொழி கிடை யாது.
கம்யூனிஸ்டுகள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் விரும்பி கற்றுக் கொள்ளட்டும். அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால் ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. தமிழகத்திலே கட்டாயம் தமிழ்ப் பாடம் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அந்த சட்டம் இப்போது அமலில் இருக்கிறதா? அது நிறைவேற்றப் படுகிறதா? பள்ளியிலே தமிழ் இல்லை என்றால், எதிர்காலத்தில் தமிழ் எங்கே இருக்கும்? வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கல்வியிலே தமிழைக் கொண்டு வர முடியாதா?
சீனப் பிரதமரும், இந்தியப் பிரதமரும் சந்தித்துப் பேசினார்கள். சீனப் பிரதமர் சீன மொழியிலேயும், இந்தியப் பிரதமர் இந்தியிலும் பேசினார்கள். மொழி பெயர்ப் பாளர்கள் மூலம் இருவரும் அறிந்து கொண்டார்கள்.
மாணவர்கள் ரஷ்யாவிற்கும், சீனாவுக்கும் சென்று அந்தந்த மொழிகளை கற்றுக் கொண்டு மருத்துவம் பயில்கிறார்கள். இங்கே வந்து மருத்துவர்களாக பணி புரி கிறார்கள். ரஷ்ய, சீன மொழிகளிலே மருத்து வம் படிக்க முடியும் என்றால் தமிழ் மொழியில் படிக்க முடியாதா? பொறியியல், தொழிற் கல்வி பாடங்களை தமிழில் படிக்க முடியாதா? இப்படி பள்ளியிலே, கல்லூரியிலே தமிழ் இல்லையென்றால் எதிர்காலத்தில் எங்குமே தமிழ் இருக்காது என்ற அபாயம் ஏற்படும்.
கீழடி குறித்து பலரும் பேசுகிறார்கள். ரூ.12 கோடி கீழடி ஆராய்ச்சிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கீழடி ஆராய்ச்சி களை அரசு மேற்கொள்வதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன்தானே.
மொழிகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அழிக்க நினைக்கிறது பாஜக. பல மொழிகளை அழித்து, ஒரே நாடு, ஒரே மொழி என மக்களை அடிமைப்படுத்திட ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகிறது. எனவே வலுவாக மொழித் திணிப்பை எதிர்க்கவும், தாய் மொழியை பாது காக்கவும் உறுதியேற்போம். இப்போது தென் மாநிலங்களின் மாநாடாக நடை பெற்றுள்ளது. விரைவில் அகில இந்திய அளவில் இப்படிப்பட்ட மாநாடுகளை முன்னெடுப்போம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன்பேசினார்.
தீக்கதிர் நிதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கருணாகரன்- காந்திமதி தம்பதியினர் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.