அரசு ஊழியர்களின் உரிமைக்களை பறிப்பதை எதிர்த்து ஜூலை 3 அன்று தேசிய எதிர்ப்பு தினமாக கடைபிடிக்குமாறு அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறைகூவல் விடுத்தது. இதனையொட்டி சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் வடசென்னை, தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் துணைப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசு சங்கத்தின் மாநில தலைவருமான மு.அன்பரசு பேசினார். மாநிலச் செயலாளர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.