tamilnadu

img

அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும்: நீதிமன்றம்

சென்னை, ஆக. 1- இரவு-பகல் பாராமல் பணி யாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அதிக ஊதியம் வழங்க வேண்  டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மருத்துவ முதுகலை மாண வர்கள் மற்றும் பயிற்சி மருத்து வர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த  2017 ஆம் ஆண்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த போராட்டத் துக்கு தடை விதிக்கக்கோரி கும ரன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை யின்போது, அரசு மருத்து வர்களை, நோயாளிகளின் உற வினர்கள் தாக்குவது குறித்த  விவரங்கள் நீதிபதிகளின் கவ னத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவ மனையில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும். அவ சர சிகிச்சைப் பிரிவுகளில் போது மான எண்ணிக்கை யில் மருத்து வர்கள் நியமிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்ட னர். மேலும், அரசு மருத்துவமனை களில் போதிய எண்ணிக்கை யில் மருத்துவர்கள் நியமிக்கப்  பட்டுள்ளனரா?, மருத்துவ மனைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் என்.கிருபாகரன், வி. பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அரசு  மருத்துவமனைகளில் அவசர  சிகிச்சை பிரிவில் 2 மருத்து வர்கள் எந்த நேரமும் கண்டிப்பாக  நியமிக்கப்பட வேண்டும், அதே நேரம் அரசு மருத்துவர்களுக்கு, காவல்துறை உதவி ஆய்வாள ருக்கு இணையான ஊதியமே  வழங்கப்படுகிறது. இதனால்தான்  பள்ளிப்படிப்பில் முதலிடம் பிடித்து, மருத்துவர்களான இவர்  கள், தனியார் மருத்துவ மனைகளை நாடிச்செல்கின்றனர். ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும் அதிக  அளவில் ஊதியம் வழங்கப்படு கிறது. ஏன் நீதிபதிகளின் உதவி யாளர்கள் கூட அரசு மருத்து வர்களைவிட கூடுதலாக சம்ப ளம் பெறுகின்றனர். எனவே, விடுப்புகூட எடுக்க  முடியாமல், இரவு, பகல் பாரா மல் பணிபுரியும் அரசு மருத்து வர்களுக்கு குறைந்தபட்சம் குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியமாவது வழங்கப்பட வேண்டும்’ என்று  கருத்து தெரிவித்தனர். பின்னர்  இதுதொடர்பாக தமிழக அரசு 2  வாரத்தில் பதிலளிக்க வேண்டும்  என்றும் உத்தரவிட்டு, விசார ணையை தள்ளி வைத்தனர்.