புதுதில்லி,ஜூன் 16- பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும் மக்களை துயரத்தில் ஆழ்த்திய இந்த விலை உயர்வு எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்து கிறது. தற்போதைய விலை உயர்வை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
கொரோனாவின் பொருளாதார தாக்கத்தால் லட்சக் கணக்கானவர்கள் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். வணிக மற்றும் சிறிய, நடுத்தர வர்க்கத்தின் வருமானத்தை விரைவாக அரிக்கும் ஒரு நேரத்தில், அரசாங்கம் ஏன் இத்தகைய விலை உயர்வை கூட கருத்தில் கொள்ளவில்லை.கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை கடந்த வாரத்தைவிட தோராயமாக ஒன்பது சதவிகிதம் குறைந்துள்ளது (கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது), அரசாங்கம் தனது மக்களி டம் லாபம் ஈட்டுகிறது என்பதை தவிர ஒன்றும் செய்யவில்லை.
தவறான அறிவுறுத்தல்களால் கிட்டத்தட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ஈட்ட அரசாங்கம் முயல்கிறது. நியாயப்படுத்தவோ பொருத்த மானதாகவோ இது இல்லை. இது மக்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்கும் கடந்த ஆறு ஆண்டுகளில் வரலாற்று ரீதியாக குறைந்த எண்ணெய் விலைகள் இருந்தபோதிலும், 12 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் ஒட்டுமொத்த அதிகரிப்பால் அரசாங்கத்தின் வருவாய் பெருமளவில் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.