அரியலூர், ஜூலை 15- அரியலூர் நகரில் மங்காய் பிள்ளையார் கோவில்தெருவில் உள்ள ஏபிஎன் ஜவு ளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவ ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப ட்டது. இந்நிலையில் அவரது கடைக்கு அரு காமையில் பூக்கடை வைத்திருந்த முருகன் என்பவரும் கொரேனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து அக்கடைவீதி முழு வதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்க ளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டதில், ஏபிஎன் கடையில் பணியா ற்றும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கடை ஊழியர்கள் தங்கியிருந்த இடங்களும் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அரியலூர் நகரில் தங்கியிருந்த 16 பேரும், கிராம ங்களில் இருந்து கடைக்கு வந்த 4 பேரும் சேர்த்து 20 பேர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சி யர் ரத்னா விடுத்துள்ள அறிக்கையில், 20 ஊழி யர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 10 தினங்களுக்குள் ஜவுளி வாங்க சென்றவர்களும், அக்கடை ஊழியர்க ளுடன் தொடர்பில் இருந்தவர்களும் அரு கில் உள்ள அரசு மருத்துவமனைகள், அல்லது அரியலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மைய த்தில் 04329 228709, 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம் என தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது.