ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசும் போது:
கொரோனா தொற்றை தடுப்பதிலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் மத்திய-மாநில அரசுகள் தோல்வி யடைந்துள்ளன. நாடு முழுவதும் தொற்றால் 54 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 6 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர். தொற்று பாதிப்பில் உலகளவில் இந்தியா 3வது இடத்திலும், இந்திய அளவில் தமிழகம் 2ஆவது இடத்திலும் உள் ளது. இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.
அறிவிக்கப்படாத அவசரநிலை
ஊரடங்கை பயன்படுத்திய மத்திய அரசு மக்கள் மீது அடுக்கடு க்கான தாக்குதலை நடத்தி வருகின்றன. நாட்டின் முது கெலும்பான பொதுத்துறைகளை தனியார்மயமாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் ஆகியவற்றின் தீர்ப்புகளை மீறி, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகை யில், சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு வரைவு அறிக்கை வெளி யிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே புதிய கல்விக் கொள்கையை அமலாக்கி வருகிறது. மத்திய அரசை விமர்சித்தால் வழக்கு தொடுத்து கைது செய்கிறார்கள். அறிவிக்கப் படாத அவசரநிலை போல் மத்திய அரசு செயல்படுகிறது.
இ-பாஸ் தேவையில்லை
அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கி வந்ததை நிறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து வழங்க வேண்டும். இ-பாஸ் தேவையற்றது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மட்டும் முடக்கி தொற்று பரவலை தடுக்கலாம். சிறுகுறு தொழிலை தொடங்க அனுமதித்தாலும் தொழிலாளர்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளை காலை, மதியம், மாலை என சுழற்சி (ஷிப்ட்) முறையில் நடத்தலாம்.
ஒப்பந்தங்களை ரத்து செய்க!
14வது நிதிக்குழு உள்ளாட்சி களுக்கு வழங்கிய நிதியை வழங்கவில்லை. மாறாக, மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றியம், ஊராட்சிகள் செய்ய வேண்டிய பணிகளை, நேரடியாக ஆட்சியரே தலையிட்டு பல்வேறு பணிகளுக்கு குழு ஒப்பந்த புள்ளிகளை (பேக்கேஜ் டெண்டர்) கோரியுள்ளார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உள்ளாட்சிகளின் அதிகாரங்களை பறிக்கக்கூடிய வகையிலும், உயர்நீதிமன்ற தடை யை மீறியும் விடப்பட்ட அனைத்து ஒப்பந்தப் புள்ளிகளையும் ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் பாலி யல் வன்முறை, குடும்ப வன்முறை, ஆணவக்கொலை அதிகரித்துள் ளது. இத்தகைய சூழலில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்பது ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கை. அதனையும் மீறி டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள் ளது. ஆனால் பள்ளிகளை திறக்க மறுக் கிறது. இவ்வாறு அவர் கூறினார்.