ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் நோயாளிகளை தரக்குறைவாக நடத்துவதாக புகார்
அரியலூர், டிச.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ மனை பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணிக்கென 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், நோயாளி களிடம் தரக்குறைவாக பேசி நடந்து வருவதாகவும், நோயாளிகளை பார்க்க வரு வோரிடம் லஞ்சம் கேட்பதாக வும் தொடர்ந்து புகார் இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சரி செய்ய வில்லையென் றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் மின் நிறுத்தம்
மன்னார்குடி, டிச.5- வரும் 7-ஆம் தேதி அன்று மன்னார்குடி 110 கிவோ துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறு வதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம், அசே ஷம், சுந்தரக்கோட்டை, மேல வாசல்,நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக் கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர், கூத்தாநல்லூர், வடபாதி மங்கலம் ஆகிய பகுதிகளு க்கு மின் விநியோகம் இருக் காது என சா.சம்பத் உதவி செயற்பொறியாளர், நகர் மன் னார்குடி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சிராப்பள்ளி, டிச.5- இந்திய ஜனநாயக வாலி பர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட கிழக்கு பகுதிக்குழு பாரதிநகர் கிளை சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் லெனின் சிறப்புரை யாற்றினார். இதில் புதிய தலைவராக எஸ்.ராஹிலா பானு, செய லாளராக ஜெ.கார்த்திக், பொருளாளராக ஏ.மொய்தீன், துணை தலைவர்களாக ஏ. கர்ணா, எஸ்.வித்யா, துணை செயலாளர்களாக ஜி.பூபதி ராஜ், எஸ்.காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். .
விவசாயத் தொழிலாளர் சங்க புதிய கிளை அமைப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.5- திருச்சி மாவட்டம் மணப் பாறை தாலுகா வையம்பட்டி ஒன்றியம் பெரிய பட்டி கிராமம் மதலைபட்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் வியா ழனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயத் தொ ழிலாளர் சங்க வட்டக்குழு உறுப்பினர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். வி.தொ.ச மாவட்ட துணைச் செயலாளர் எம்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எம்.ராஜு, வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பி.பாலு ஆகியோர் சிறப்புரையாற்றி னர். கூட்டத்தில் கிளைத் தலை வராக சகாய வேளாங் கண்ணி, செயலாளராக ஆறு முகதாயி, பொருளாளராக தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர்களாக அனிதா, கிரேசி, ரங்கராஜ், துணைச் செயலாளர்களாக ஆரோக்கி யம், எக்ஸெல், பாத்திமா ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர்.