புதுதில்லி, ஆக. 2 - ஹரியானா மாநிலத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் கும்பல் தூண்டிவிட்ட மதக் கலவரம் புதன்கிழமையன்றும் தொட ர்ந்தது. இது தலைநகர் தில்லிக்கும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விஎச்பி-யின் மத வன்முறைக்கு, ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், புதனன்று மேலும் ஒருவர் பலி யானார். இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 2 போலீசார், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். நூஹ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழ மை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி னர். அத்துடன் நூஹ், குர்கான், பல்வால், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். எனினும், விஎச்பி நடத்தும் வன்முறை தடுத்து நிறுத்தப்படவில்லை. செக்டார் 57-இல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்க்கிழமை அதி காலை தீ வைக்கப்பட்டதுடன்,
அந்த மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயதேயான ஹபீஸ் சாத் கொல்லப் பட்டார். இதேபோல செவ்வாயன்று இர வும் வன்முறைகள் தொடர்ந்தன. குர்கான் செக்டார் 66-இல், 7 கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 14 கடைகள் சூறையாடப் பட்டன. குர்கானிலுள்ள பாட்ஷாபூரில் உணவகத்திற்கு தீ வைத்த மதவெறிக் கும்பல், தொடர்ந்து அருகில் உள்ள கடை களையும் அடித்து நொறுக்கி சேதப் படுத்தியது. கலவரத்தில் 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8 காவல்துறை வாகனங்கள் உள்பட 50 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. குர்கான் அருகிலுள்ள சோனா விற்கும் வன்முறை பரவியுள்ளது. அங்கு முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான 4 வாகனங்கள், ஒரு கடை தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மசூதி ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்ட மத வெறிக் கும்பல் மசூதிக்கு முன்பு “ஜெய் ஸ்ரீராம்” என்றும் முழக்கமிட்டனர். வன்முறையைத் தொடர்ந்து பாட்ஷாபூர் சந்தை மூடப்பட்டது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே 13 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், மேலும் 6 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வரவுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதுவரை 41 வழக்குகளைப் பதிவுசெய்துள்ள போலீசார், 116 பேரை கைது செய்து உள்ளனர். கலவரம் நடத்தியது மட்டுமல்லா மல், நூஹ் பகுதியில் நடந்த வன்முறை யைக் கண்டிக்கிறோம் என்ற பெயரில் தலைநகர் தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் போராட்டத் துக்கும் அழைப்பு விடுத்தன. மேவாட் பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் மட்டுமல்லாது, பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளும் மானேசர் பகுதியில் உள்ள பீசம் மந்திரில் மகா பஞ்சாயத்து க்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தலைநகர் தில்லிக்கும் வன்முறை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூஹ் வன்முறையில் உயிரிழந்த ஊர்க்காவல் படைவீரர்களுக்கு ரூ. 57 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்கு-களில் வாக னங்களைத் தவிர, பாட்டில்கள், கேன்களில் கேட்டால் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக்கூடாது என்று குர் கான் மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள் ளார்.
பேரணிக்கு ஆயுதங்களோடு வந்த விஎச்பி கும்பல்
ஹரியானாவின் நூஹ் பகுதியில் பிரிஜ்மண்டல் ஜலாபிஷேக் யாத்தி ரைக்கு விஎச்பி அனுமதி பெற்றபோது, தங்களின் அணிவகுப்பில் ஆயுதங்கள் இடம்பெறாது என்ற உத்தரவாதம் அளிக் கப்பட்டு உள்ளது. ஆனால், அதனை மீறி ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர். ஊர்வலத்திற்கு முன்னதாக ஜூலை 27 அன்று, நூஹ் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்ற கூட்டம் நடந்துள்ளது. அப்போது ஆயுதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தாங்கள் கூறியதை காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் தற்போது சுட்டிக்காட்டுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஊர்வலத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; ஆயுதங்கள் பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம் என்று ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் உறுப்பினர் மவுலானா யஹியா கரீமியும் அந்த கூட்டத்திலேயே கூறியுள்ளார். ஆனால், இவை அனை த்தையும் மீறி, விஎச்பி கூட்டத்தினர் ஆயு தங்களைக் கொண்டு வந்துள்ளனர். அதேபோல பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் கொலையில் குற்றம்சாட்டப் பட்ட மோனு மானேசர் எனப்படும் மோகித் யாதவ், ஜூலை 29 அன்று தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வெளி யிட்ட வீடியோவில், “நான் நேரில் யாத்திரையில் கலந்து கொள்வேன், எனது முழு குழுவும் கலந்துகொள்ளும்” என்று கூறி, ஆத்திரத்தைத் தூண்டி யுள்ளார்.
ஊர்வல விவரங்களைப் போலீஸூக்கு தரவில்லை : துணைமுதல்வர் குற்றச்சாட்டு
ஹரியானா மதக் கலவரம் தொடர் பாக ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா பேட்டி ஒன்றை அளித் துள்ளார். அதில், விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய இந்த பிரிஜ் மண்டல் ஜலா பிஷேக் யாத்ரா பற்றிய முழுமையான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் தரவில்லை. யார்? யார்? பங்கேற்கின்றனர் என்ற தகவல்களும் அவர்கள் தரவில்லை. இதன் காரண மாக, நூஹ் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. கடந்த காலத்தில் இது போன்ற சம்பவம் எதுவும் மாநிலத்தில் நடக்கவில்லை. சம்பவத்திற்கு கார ணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் தள், விஎச்பி-யின் வெறுப்புப் பேச்சு
நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புக்கள் நடத்தும் பேரணிகளால் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உ.பி, ஹரியானா, தில்லி மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானாவில் மதவெறி வன்முறைகளை அரங்கேற்றிய விஸ்வ ஹிந்து பரிஷத், அடுத்ததாக தலைநகர் தில்லி மற்றும் புறநகரான நொய்டாவிலும் பேரணி என்ற பெயரில் வன்முறை வேலைகளை ஆரம்பித்தன. குறிப்பாக, தில்லியில் புதனன்று காலையிலேயே பஜ்ரங் தள் போராட்டத்தில் இறங்கியது. இதையடுத்து, விஎச்பி மற்றும் பஜ்ரங் தள்ளின் பேரணிகளுக்கு தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தில்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் பேரணிகளில் வன்முறை மற்றும் வெறுப்பை தூண்டும் பேச்சுகளை போலீசார் அனுமதிக்கக் கூடாது. வன்முறைகள் நிகழாமல் தடுக்க உ.பி, ஹரியானா, தில்லி மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.