states

img

விவசாயிகளின் உறுதியான எதிர்ப்பால் ஹரியானாவில் மதவெறிப் பேரணி நிறுத்தம்

நூஹ், ஆக. 28 - ஹரியானா மாநிலம் நூஹில் விஎச்பியின் “வகுப்புவாத” ஊர்வலம் நடத்த விவசாயி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் ஆளும் பாஜக அரசு பேரணியை நிறுத்தி யுள்ளது.  பாஜகவின் வகுப்புவாத அரசியலால் ஹரியானா மாநிலத்தின் நூஹ், குர்கான், மேவாட் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் முதல் வாரம்  வன்முறை அரங்கேறி யது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில்  நூஹ், மேவாட் மாவட்டங்கள் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.  வன்முறையை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஆளும் பாஜக அரசு முஸ் லிம் மக்களின் வீடுகள், கடைகளை புல்டோ சர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. உயர் நீதிமன்ற தீர்ப்பால் புல்டோசர் நடவடிக்கை மற்றும் வன்முறை சம்பவங்கள் ஓரளவு குறைந்துள்ள நிலையில், இந்துத்துவா அமைப்புகள் ஒன்று கூடி “சர்வ் ஜாதிய இந்து மகா பஞ்சாயத்து” என்ற பெயரில் மாவட்ட அளவிலான அமைப்பை உருவாக்கி, நூஹ் மாவட்டத்தில் திங்களன்று “சோபா யாத்திரை” என்ற பெயரில் வகுப்புவாத ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தன.

விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

இதனிடையே, இந்து சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்தியிலேயே, இத்த கைய மதவெறிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் “சோபா யாத்திரை”-க்கு பெயரளவில் தடைவிதித்தார். ஆனால் விஎச்பி உள்ளி ட்ட இந்துத்துவா அமைப்புகள் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என எச்சரித்த நிலையில், ஆல்வார் பகுதியில் நடைபெற்ற  விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத் தில், “ஹரியானா அரசு இந்துத்துவா குழுக் களை நூஹில் மற்றொரு வகுப்புவாத ஊர்வ லம் நடத்த அனுமதித்தால் பதிலடியாக டிராக்டர் பேரணியை நடத்துவோம்” என  விவசாயிகள் அமைப்புகளும், 36 சமூகங் களின் பிரதிநிதிகளும் கூட்டாக தீர்மானம் நிறைவேற்றினர்.

மக்களை வன்முறையில் ஈடுபடுத்துவதே பாஜகவின் கொள்கை

விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத் தில் பாரதிய கிசான் யூனியன் விவசாய சங்க தலைவர் ராகேஷ் தியாகத் கூறுகை யில்,”மக்களை வன்முறையில் ஈடுபடுத்தி ஆதாயத்துடன் ஆட்சி செய்வதே பாஜக வின் கொள்கை. நான் நூஹ் மாவட்ட மக்க ளுக்கு ஒன்று கூறுகிறேன், உங்கள் பிள்ளை களுக்கு கல்வி கற்பித்து, அவர்களை வேலைக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை ஒருபோதும் கலவரத்திற்கு அனுப்பாதீர்கள்” எனக் கூறினார்.

‘யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை’

இந்நிலையில் திங்களன்று நூஹ்  பகுதியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டி ருந்த “சோபா யாத்திரை”-க்கு அனுமதி வழங்க வில்லை எனவும், விஎச்பி அமைப்பின் சுமார் 700-800 பேர் மூன்று கோவில்களில் ஜலாபிஷேகம் பூஜை நடத்த மட்டுமே  தனித்தனியாக செல்லுமாறு அனுமதிக்கப் பட்டனர் எனவும் ஹரியானா ஏடிஜிபி மம்தா சிங் தெரிவித்தார்.  விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக பேரணிக்கு அனுமதி கிடைக்காத நிலை யில், விஎச்பி நடத்த இருந்த கலவர யாத்திரை நடக்க முடியாமல் போனது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதவெறிக்கு எதிராக அணிதிரளும் விவசாயிகள் 

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங் களுக்கு எதிராக   பஞ்சாப் விவசாயிகளுட னும் நாட்டின் இதர பகுதி விவசாயிகளுடனும் ஒன்றிணைந்து ஹரியானா விவசாயிகள், சாதி, மத வேறுபாடு பாராமல் ஒன்றி ணைந்து போராடினர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தங்களது சொந்த மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக - விஎச்பி மதவெறிக்  கூட்டம் மீண்டும் மீண்டும் கலவரத்தைத் தூண்டுவதற்கு எதிராக, ஹரியானா விவ சாயிகள் சாதி, மத வேறுபாடின்றி களத்தில் மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான சமூகவியல் வளர்ச்சிப் போக்கு ஆகும். இந்த ஒற்றுமை, முதல் முறையாக பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திலேயே மதவெறி யாத்திரைக்கு அனுமதி மறுக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.