states

img

ஹரியானாவில் மீண்டும் ஊர்வலம் நடத்த சங்பரிவார அமைப்புகள் தீவிரம்: நூ-வில் இணைய சேவை நிறுத்தம்!

ஹரியானாவில் சங்பரிவார அமைப்புகள் ஆகஸ்ட்-28 ஆம் தேதி மீண்டும் மத ஊர்வலம் நடத்துவதில் தீவிரமாக இருப்பதால், நூ-வில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.

ஹரியானா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடந்த யாத்திரையில், வன்முறை ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், யாத்திரையை மீண்டும் ஆகஸ்ட்-28 தொடர உள்ளதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அறிவித்துள்ளன.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.ஆனால், யாத்திரையை நடத்துவதில் சங்பரிவார தீவிரமாக உள்ளன. இதனால் நூ பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இணையம் மற்றும் தொலைதொடர்பு மொத்தமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் மதரீதியாக மக்களை பிளவுப்படுத்த சங்பரிவார அமைப்புகள் மதக்கலவரங்களை கையில் எடுத்து வரும் நிலையில், ஏற்கனவே கலவரம் நடந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், மீண்டும் சங்பரிவார அமைப்புகள் விடாப்பிடியாக ஊர்வலத்தை நடத்த திட்டமிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.