சமீபத்தில் 13 அம்சக் கோரிக் கைகளை அமல்படுத்தக் கோரி தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில் ஈடுபட்ட விவ சாயிகள் மீது மோடி அரசு கொலை வெறித் தாக்குதல் நடத்திய நிலை யில், இந்த தாக்குதலில் 3 விவ சாயிகள் உயிரிழந்தனர். பலர் படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விவ சாயிகள் மீதான தாக்குதல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றா ததை கண்டித்து ஹரியானா மாநி லத்தில் பாஜக வேட்பாளர்களை விவசாயிகள், பொதுமக்கள் கூட் டாக விரட்டியடித்து வருகின்றனர்.
2 வாரங்களுக்கு முன் வாக்கு கேட்டு பாஜகவினர் ஊருக்குள் நுழையக்கூடாது என 60க்கும் மேற் பட்ட கிராம மக்கள் ஊர் எல்லை களில் பேனர் வைத்த நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டு பாஜக வேட்பாளர்கள் விரட்டியடிக் கப்பட்டுள்ளனர்.
ஹிசார் தொகுதி பாஜக வேட்பா ளர் ரஞ்சித் சிங் சவுதாலா மிர்சாபூ ருக்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்பொழுது மிர்சாபூர் விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் ரஞ்சித் சவுதாலாவின் வாகனத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். “விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு இங்கு ஏன் வந்தீர் கள்?” எனக் கூறி விரட்டியடித்த னர். பாதுகாப்புப் படையினர் உதவி யுடன் ரஞ்சித் சிங் சவுதாலா சம்பவ இடத்தில் இருந்து ஓட்டம் பிடித் தார்.
கருப்புக்கொடி காட்டி போராட்டம்
பிவானி - மகேந்திரகார்க் மக்க ளவை தொகுதி பாஜக வேட்பா ளர் தர்மபீர்சிங் சவுத்ரி தில்லி எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்பொழுது, “வாக்குறுதிகளை நிறைவேற்றா மல் இங்கு வரக் கூடாது” என கோஷங்களை எழுப்பி பொதுமக் கள், விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பாஜக வேட்பாளர் தர்மபீர்சிங் சவுத்ரி வந்த பாதையி லேயே திரும்பி சென்றார். இவ் வாறு பல்வேறு வடமாநிலங்களின் பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்பட் டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்திலும் பாஜகவினர் விரட்டியடிப்பு
கல்வீச்சு: வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு
மேற்கு உத்தரப்பிர தேசத்தில், ராஜபுத்தி ரர்களின் கடும் கோபத்தை எதிர்கொள்ளும் பாஜக முக்கிய தலைவர்கள், பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேட்பாளரின் கார் கண்ணாடி களை உடைத்தும் பொதுக்கூட் டத்தின்போது கல்வீசியும் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது. கிரா மங்களுக்குள் செல்ல விடாமல் பாஜகவினர் விரட்டியடிக்கப்பட் டுள்ளனர்.
ஒன்றிய அமைச்சர் புரு ஷோத்தம் ரூபாலா குஜராத்தில் உள்ள ராஜபுத்திர குடும்பங்க ளுக்கு எதிராக விவாதத்துக்கு ரிய கருத்தை தெரிவித்ததும் ஒட்டு மொத்த ராஜபுத்திர சமூகமும் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள் ளது. ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த சங்கீத் சோமுக்கும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த சஞ்சீவ் பல் யானுக்கும் இடையிலான மோதல் காரணமாக, மேற்கு உத் தரப்பிரதேசத்தில் தங்களது வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று பாஜக தலைமை கவலை கொண்டுள்ளது.
ஹாட்ரிக் வெற்றிக்காக களம் இறங்கிய சஞ்சீவ் பல்யானின் கட்டவுலி தேர்தல் பேரணி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட் டது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் பேர ணியில் பல்யான் பேசிக் கொண்டி ருந்த போது, அருகில் நிறுத்தப் பட்டிருந்த கார்களின் கண்ணாடி களை சிலர் உடைத்தனர். சஞ்சீவ் பல்யானைப் புறக்கணிக்க ராஜ புத் பிரிவினர் அழைப்பு விடுத் துள்ள சூழலில், தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி பொருத்தமற்றது. ஆனால், வேட்பாளருக்கு எதி ராக இவ்வளவு பகிரங்கமாக கோபம் காட்டப்படும் என்று பாஜக கருதி இருக்கவில்லை.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ராஜபுத்திர பிரிவினருக்கு கணி சமான செல்வாக்கு உள்ளது. கௌதம்புத்தநகர், காசியாபாத், சஹாரன்பூர், மீரட், கைரானா, முசாபர்நகர், பாக்பத், பிஜ்னோர், நாகினா, அம்ரோஹா, மொராதா பாத், சம்பல், அலிகார், ஹத்ராஸ், மதுரா, ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி போன்ற அனைத்து தொகுதிகளி லும் ராஜபுத் பிரிவினர் தீர்க்கமான எதிர்ப்பு இயக்கங்களை உரு வாக்க முடியும். இதனால் மக்கள வைத் தேர்தலில் 80 தொகுதி களை கொண்ட உத்தரப்பிர தேசத்தில் பாஜக பலத்த பின்ன டைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.