states

img

உத்தரப்பிரதேசம்: 59தொகுதிகளில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு ‘பாஜக ஒழிக்கப்படுகிறது’: அகிலேஷ்

லக்னோ, பிப்.20-  உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் உள்ளிட்ட தொகுதி களில் விறு விறுப்பான வாக்குப்பதிவு நடை பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநி லத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 20 ஞாயிறன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  ஹத்ராஸ், ஃபிரோசாபாத், எட்டா, கஸ்கஞ்ச், மைன்புரி, ஃபரூக்காபாத், கன்னோஜ், எட்டாவா, அவுரையா, கான்பூர் தேஹாத், கான்பூர் நகர், ஜலான், ஜான்சி, லலித்பூர், ஹமிர்பூர் மற்றும் மஹோபா மாவட்டங்களுக்கு உட்பட்ட 59 தொகுதி களில்  627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

 2.16 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந் தனர். அவர்களுக்காக 25,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால்  தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அவரை  எதிர்த்து பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் போட்டியில் உள்ளார். இதன்காரண மாக இந்தத் தொகுதி மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஜஸ்வந்த் நகரில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்த பின்னர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஒழியப்போ கிறது. உத்தரப்பிரதேச விவசாயிகள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். முதல் இரண்டு கட்ட தேர்த லில் நாங்கள் சதம் அடித்துள்ளோம். இந்த மூன்றாம் கட்டத் தேர்தலிலும் சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து கட்சிகளையும் விட முன்னணியில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.