பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரதமர் மோடி யின் சொந்த தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழக ஐஐடி வளா கத்தில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி பாஜக வைச் சேர்ந்த குணால் பாண்டே, அபி ஷேக் சவுகான், சாக்சம் படேல் ஆகிய 3 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இவர்களில் விபரம் தெரிந் தும் மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சா ரத்திற்காக 2 மாத காலம் கைது செய்யா மல் உத்தரப்பிரதேச காவல்துறை காலம் தாழ்த்திய நிலையில், 3 பேரையும் ஞாயி றன்று கைது செய்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரில் குணால் பாண்டே வாரணாசி தொகுதியின் பாஜக தொழில்நுட்ப உறுப்பினராகவும், சாக்சம் படேல் உத்தரப்பிரதேச பாஜக தலை வர் திலீப் படேலின் உதவியாளராகவும், இருவரும் பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய பாஜக தலைவர் நட்டாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற புகைப்பட ஆதாரத்துடன் உத்தரப்பிர தேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளி யிட்டார். பலாத்கார குற்றவாளிகளின் விப ரங்களை வெளியிடுவது சட்டவிரோதம் எனக் கூறி காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாரணாசியில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட் டத்தில் பனாரஸ் பல்கலைக்கழக மாண வர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் திரளாக பங்கேற்றுள்ளதால் போராட்டத்தை ஒடுக்க வாரணாசி நக ரின் மூலை முடுக்கெல்லாம் உத்தரப்பிர தேச மாநில அரசின் தாக்குதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.