சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் களை முன்னர் கூறியதை மேற் கோள்காட்டி, “இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு ஏமாற் றும் வழி” எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறு வனம் வெளியிட்டுள்ள காணொ லியில் அவர் மேலும் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் “இந்து என்பது மதம் இல்லை, மாறாக அது ஒரு வாழ்க்கை முறை மட்டுமே” என இரண்டு முறை கூறியுள்ளார். பிர தமர் மோடியும் “இந்து என்று ஒரு மதம் இல்லை” என கூறி யுள்ளார். அதனால் இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு ஏமாற் றும் வழிக்கானது ஆகும். மோகன் பகவத், பிரதமர் மோடி பேசி யதை கண்டுகொள்ளாத இந்து அமைப்புகள் தன்னை போன்ற வர்கள் பேசினால் மட்டும் நாட் டில் அமைதியின்மை ஏற்பட்டு விட்டது என்று குற்றம்சாட்டுவது ஏன் என சுவாமி பிரசாத் மவுரியா கேள்வி எழுப்பியுள்ளார்.