பாஜகவில் இருந்தாலும் அக் கட்சியின் வகுப்புவாத அர சியலுக்கும், பிரதமர் மோடியின் சர்வாதிகாரம் கலந்த ஆட்சிக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சத்யபால் மாலிக் விரைவில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் மக்களவை தேர்த லில் சத்யபால் மாலிக்கை உத்தரப்பிர தேச மாநிலத்தின் அலிகார் தொகுதி யின் வேட்பாளராக களமிறக்கவும் சமாஜ் வாதி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் மூலம் தகவல் வெளி யாகியுள்ளன. ஏற்கெனவே கடந்த 1989 வரை 1991 வரை அலிகார் மக்க ளவை தொகுதியில் ஜனதாதளம் கட்சி சார்பில் வெற்றி பெற்று சத்யபால் மாலிக் எம்.பி.யாக தேர்வு செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கத்தில் ஆர்எல்டி - பாஜக
ஜாட் இன வாக்குகளை வளைக் கவே சரண் சிங்குகிற்கு பாரத ரத்னா விருது வழங்கி “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகித்த ஜெயந்த் சவுத்ரி யின் ஆர்எல்டி கட்சியை தங்கள் பக்கம் வளைத்தது பாஜக. ஜெயந்த் சவுத்ரி மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களே பாஜக கூட்டணி பக்கம் உள்ள நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரும் “இந்தியா” கூட்டணியிலேயே தொட ரப் போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பின் வெளிப்பாடாக கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் ராகுல் யாத்திரையில் ஆர்எல்டி கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டதன்மூலம் ஆர்எல்டி இரண்டாக சிதறியது. இந்த விவ காரத்தால் ஆர்எல்டி - பாஜக கூட்டணி அதிர்ச்சியில் உறைந்த நிலையில், தற்போது சத்யபால் மாலிக் மூலம் ஜாட் மக்களின் வாக்குகளை உடைக்க சமாஜ்வாதி வியூகம் வகுத்துள்ளது ஆர்எல்டி - பாஜக கூட்டணிக்கு கலக் கத்தை ஏற்படுத்தியுள்ளது.