states

img

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேச்சு பாஜகவுக்கும் மக்களுக்கும் இடையிலானதே உ.பி. தேர்தல்!

லக்னோ, பிப்.22- ஆளும் பாஜகவுக்கும், மக்களுக்கும் இடையிலானதே உ.பி. சட்டப்பேர வைத் தேர்தல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் கூறியுள்ளார். மேலும், இந்தப் போட்டியில், சமாஜ்வாதி கட்சி மக்களின் பக்கம் உள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 3 கட்ட தேர் தல் முடிந்துள்ள நிலையில், 4-ஆவது கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதையொட்டி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் திங்களன்று சாந்திலா தொகுதியில் பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பி.எம். (பிரதமா்) நரேந்திர மோடியை முதல்வா் ஆதித்யநாத் அடிக்கடி தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து வருகிறார். பி.எம். என்றால் ஆங்கிலத்தில் ‘பேக்கா்ஸ் அண்ட் மூவா்ஸ்’ என்றும் ஒரு விளக்கம் உண்டு. அதாவது, ஓா் இடத்தை காலி செய்து வேறு இடத்துக்கு பொருள்களை எடுத்துச் செல்வதாகும். அந்த வகையில், ஆதித்யநாத் பிரசாரத்துக்கு பி.எம். (பிரதமர் மோடி)வரும்போதெல்லாம் முதல்வரின் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் மக்களுக்கு வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக-வுக்கு எதிராக மக்கள் மன தில் உயரழுத்த மின்னோட்டம் பாய்ந்து வருகிறது. அது தோ்தல் முடிவு வெளியாகும்போது பாஜக-வின் மீது பாய்ந்து அவா்களை ஆட்சியில் இருந்து தூக்கி வீசும். இந்தத் தோ்தல் உத்தர பிரதேச மக்களுக்கும் பாஜகவுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது. இதில் சமாஜவாதி கட்சி மக்களின் பக்கம் உள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சியால் எந்தப் பலனும் இல்லை. மக்கள் அவா்களுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்கி விட வேண்டாம். அடுத்து அமையும் சமாஜ்வாதி அரசு மிகவும் உறுதி யாக இருக்கும் வகையில் உங்கள் வாக்குகளை முழுமையாக எங்கள் கட்சிக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு அகிலேஷ் பேசியுள்ளார்.