லக்னோ, ஜூலை 16- 296 கிமீ நீளமுள்ள சுமார் ரூ.14,850 கோடி செலவில் கட்டப்பட்ட பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்தச்சாலை உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா மற்றும் எட்டாவா ஆகிய ஏழு மாவட் டங்கள் வழியாகச் செல்கிறது. எதிர்காலத்தில் இந்தச் சாலை ஆறு வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விரைவுச்சாலைக்கான அடிக்கல்லை 2020-ஆம் தேதி பிப்ரவரி 29-ஆம் தேதி மோடி நாட்டினார். இந்தப் பணி 28 மாதங்களில் முடிக் கப்பட்டுள்ளது.