states

img

பைபிள்- போதனைகளை கொடுப்பது மதமாற்ற நடவடிக்கை ஆகாது!

லக்னோ, செப். 8 - உத்தரப் பிரதேச மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், பைபிள் மற்றும் நல்ல போதனைகளை வழங்குவதை மதமாற்ற முயற்சி என கருத முடியாது என்று அலகா பாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ  அமர்வு கூறியுள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடியி னர் வகுப்பைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக, ஜோஷ் பப்பாச் சென் மற்றும் ஷீஜா ஆகிய 2 கிறிஸ்த வர்கள் மீது, அம்பேத்கர் நகர் மாவட் டத்தைச் சேர்ந்த பாஜக-வினர் கடந்த ஜனவரி 24 அன்று புகார் அளித்தனர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகியோரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாதிக் கப்பட்ட கிறிஸ்தவர்கள் 2 பேரும், தங்களுக்கு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மேல்முறையீட்டிற்கும் சென்றனர். நீதிபதி ஷமீம் அகமது அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது, வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, “கற்பித்தல், போத னைகளை வழங்குதல், புனித பைபிளை விநியோகித்தல், குழந் தைகள் கல்வி பெற ஊக்குவித்தல், கிராமப்புற மக்கள் சபையை ஏற் பாடு செய்தல் மற்றும் மத சடங்கு களை நடத்துதல், கிராமப்புற மக்க ளுக்கு இடையிலான பிரச்சனைக ளை தீர்த்து வைத்தல், மது அருந்த வேண்டாம் என போதித்தல் போன் றவை 2021 ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதமாற்ற முயற்சியாக கருதப்படாது” என்று குறிப்பிட்டார். மேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் அல்லது அவரது குடும்பத்தினர் மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், முகம் தெரியாத மூன்றா வது நபர் புகாரளிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, ஜோஷ் பப்பாச்சென் மற்றும் ஷீஜா ஆகியோருக்கு ஜாமீனும் வழங்கி யுள்ளார்.