லக்னோ,பிப்.20- உத்தரப்பிரதேச மாநில சட்ட மன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறுகிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங், சமீபத்தில் உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகதான் வெற்றிபெறும். இந்துக்கள் ஆதரவு முதல்வர் ஆதித்யா நாத்திற்குதான் உள்ளது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், யோகி க்கு வாக்களிக்காத மக்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்ட மாக்கப்படும்’ என்று மிரட்டல் விடுத்து பேசியிருந்தார். இந்த வீடியோ மிக பெரிய சர்ச்சையானது. இந்நிலை யில் இவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க கூடுதல் நேரம் கேட்டார். கூடுதலாக 24 மணி நேரம் கொடுக்கப்பட்டு, கெடு விதிக்கப்பட்டது. அதற்கு பிறகும் ராஜா சிங் விளக்கமளிக்கவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘ராஜா சிங் பேசிய கருத்து, முழுக்க முழுக்க தவறானது. பொறுப்பற்ற தன்மை கொண்டது. தவறான உதாரணத்தை, அழுத்த த்தை ஏற்படுத்த கூடியது. அவர் தேர்தல் விதிகள் 171சி மற்றும் 171 எப் ஆகியவற்றை மீறிவிட்டார். இத னால் அடுத்த 72 மணி நேரங்களுக்கு இவர் பொது மேடைகளில் பேசக் கூடாது. நிருபர்கள் சந்திப்பு மற்றும் கூட்டங்களை நடத்த கூடாது. அறிக் கைகள் வெளியிட கூடாது’ என்று கூறி தடை விதித்துள்ளது. அதோடு இவர் மீது வழக்குபதியும்படி இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமலுக்கு வந்தது. பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பேஸ்புக் விதிகளை மீறிவிட்டார் என்று கூறி கடந்த 2020 வருடம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராம் சமூக வலைத்தளத்தில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.