லக்னோ, டிச. 5 - சாதிய அடிப்படையிலான பேரணிகளை- ஏன், நிரந்தரமாக தடைசெய்யக் கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. இதுதொடர்பாக 9 ஆண்டுகளுக்கு முன் பாக அனுப்பிய நோட்டீஸிற்கு தலைமைத் தேர்தல் ஆணையரும், உ.பி. மாநிலத்தின் நான்கு முக்கிய அரசியல் கட்சிகளும் பதில ளிக்காத நிலையில், புதிதாக நோட்டீஸ் அனுப்ப வும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சாதி அடிப்படை யிலான பேரணிகளைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் மோதிலால் யாதவ் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “சாதி அமைப்பில் அரசியலை புகுத்தும் முயற்சியில், அரசியல் கட்சிகள் சமூகக் கட்டமைப்பையும் ஒற்றுமை யையும் கடுமையாக சீர்குலைத்துவிட்டன. இதனால் சமூகப் பிளவு ஏற்பட்டுள்ளது. பெரும் பான்மை குழுக்களின் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சிகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் சிறுபான்மை இனத் தவர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2013 ஜூலை 11 அன்று, இந்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் உமாநாத் சிங் மற்றும் நீதிபதி மகேந்திர தயாள் அமர்வு, மாநிலத்தில் சாதிய அடிப்படையிலான பேரணி களை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. “சாதி அடிப்படையிலான பேரணிகளை நடத்துவதற்கான தடையற்ற சுதந்திரம் முற்றி லும் வெறுக்கத்தக்கது; நவீன தலைமுறையி னரின் புரிதலுக்கு அப்பாற்பட்டது; இத்தகைய நிகழ்வு சட்டத்திற்கு புறம்பானவை; குடிமக்க ளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செய லாகவும் இது இருக்கும்” என்று உத்தரவில் குறிப்பிட்டது. அத்துடன், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உ.பி. மாநிலத்தின் நான்கு முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 9 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இந் நிலையில், திங்களன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் வழக்கை விசாரித்தனர். அப்போது, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரும், அரசியல் கட்சியினரும் தங்க ளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு பதில ளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், உ.பி. மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பேரணி களை ஏன் நிரந்தரமாகத் தடை செய்யக் கூடாது; தடையை மீறும் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். அத்துடன், அரசி யல் கட்சிகளும் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு புதிய உத்தரவு பிறப்பித்தனர்.