ராஜஸ்தானில் தேவ்கர் எனும் இடத்தில் ஹோலி தீ இஸ்லாமியர்கள் வசிக்கும் இடத்தில் மூட்டப்பட்டது. அங்கிருந்த இஸ்லாமியர்கள் தமது வீடு தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் வேறு இடத்தில் வைக்கும் படியும் வேண்டினர். ஆனால் காவல்துறை யினர் இஸ்லாமியர்களை வீட்டுக்குள் தள்ளி பூட்டினர். பின்னர் ஹோலி தீ வைக்கப்பட்டது. அந்த தீ இஸ்லாமி யரின் வீட்டிற்கும் பரவியது. தீ அணைக்கும் வண்டிகள் வருவதற்குள் ஏராளமான பொருட்கள் நாசம்! வேறு பல இடங்களிலும் ஹோலி பண்டிகை எனும் பெயரில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்டனர். அலி கார் மாவட்டத்தில் பல மசூதிகள் தார்ப்பாலின் கொண்டு மூடப்பட்டன. மசூதிகள் மீது வண்ணங்களை தெளிக்கும் கும்பலை அடக்குவதற்கு பதிலாக மசூதிகளுக்கு தார்ப்பாலின்! ஹோலி பண்டிகை அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் விழா! முகலாயர்கள் காலத்தில் ஹோலி பண்டிகை அரசாலேயே கொண்டாடப்பட்டது. ஈதுல் ஃபிதர் என ரம்லானையும் ஈதுல் சுஹா என பக்ரீதை யும் அழைத்தது போல ஹோலியை ஈதே குலாபி என முகலாயர்கள் அழைத்தனர். குலாபி எனில் வண்ண மயம் எனப் பொருள். மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்ந்த ஹோலி இப்பொழுது இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகிறது. ஹோலி மட்டுமல்ல; விநாயகர் சதுர்த்தி/ ராம நவமி/ ஹனுமான் ஜெயந்தி என அனைத்து பண்டிகை களையும் மதவெறி ஆயுதமாக சங் பரிவாரத்தினர் பயன்படுத்துகின்றனர். பண்டிகைகளையும் தேசத்தையும் பாதுகாக்க ஒரே வழி பா.ஜ.க. அரசை அகற்றுவதுதான்! - அ.அன்வர் உசேன்