ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலை யில், கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜகவின் முன்னணி தலைவரான சாத்வி அனாதி சரஸ்வதி வெள்ளி யன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அனாதி சரஸ்வதியின் ராஜஸ்தானில் சுதந்திரப் போராட்டத்தின் போது வீரமரணம் அடைந்த ஹேமு கலானியின் பேத்தி ஆவார். சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவரான அனாதி சரஸ்வதிக்கு அஜ்மீர் வடக்கு சட்டமன்றத் தொகுதியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிந்தி சமூகத் தலைவர் பிம்பத்தின் மூலம் அஜ்மீர் மண்டலம் பாஜகவின் கோட்டையாக இருந்த நிலையில், அனாதி சரஸ்வதி, காங்கிரசில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி யுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தானில் ஒன்றிய பாஜக அமைச்சர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே ஒரு அணி என 2 அணியாகவும் செயல்படுவதால் பாஜக திண்டாடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருப்பது பாஜகவிற்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.