states

img

ராஜஸ்தான்: பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு  

ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

ராஜஸ்தான் – கோகுண்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் பீல். இவருக்கு எதிராக 37 வயது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து, அவர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து உதயப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோகுண்டா எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அம்பாமாதா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்னதாக வேறொரு பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றம் செய்ததற்காக ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த 10 மாதங்களில் கோகுண்டா எம்எல்ஏ பிரதாப் பீல் மீது பதிவு செய்யப்படும் 2வது பாலியல் வழக்கு இது. இதனை தொடர்ந்து பிரதாப் பீல் மீதான 2 பாலியல் குற்றங்களுக்கான விசாரணையும் சிஐடி விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

;