india

img

தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை:ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு 

ஜெய்ப்பூர்: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ரைபிள் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த  அவனி லெஹாரா .இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றையும்  படைத்துள்ளார்.

இந்த சாதனையைப் பாராட்டி அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும், பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற தேவாந்திராவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையும் , சுந்தர் சிங்குக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.   

;