திருப்பூர் மங்கலம் சாலை, பழக்குடோன் பகுதியில், போலீசார் வாகன சோதனையி ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், கஞ்சா போன்ற பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் லோகநாதன் (22), உமா மகேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் மங்கலம் சாலையில், 33 ஆயிரம் ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி வாங்கியுள்ளனர். பின்னர், எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்து பிரித்துப் பார்த்த போது அதில், மாட்டுச் சாணம் மற்றும் வைக்கோல் கலந்து கஞ்சா என ஏமாற்றி தங்களிடம் விற்றதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கேவிஆர் நகரைச் சேர்ந்த சாரதி (21), கவின் (22) ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து லோகநாதன், உமா மகேஸ்வரன், சாரதி, கவின் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.