states

img

குஜராத்தைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்களுக்கே முன்னுரிமை

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ராஜஸ்தான் பாஜகவில் கடும் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒன்றிய அமைச்சர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் ஒரு அணி என இரண்டு அணியாக பாஜக உடைந்துள்ளது. இந்த கோஷ்டி பூசலால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நிலையில், 2 நாட்களுக்கு முன் ராஜஸ்தான் பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநிலத் தலைவரும், ராஜஸ்தான் ஹஜ் கமிட்டியின் தலைவருமான அமின் பதான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

காங்கிரஸில் இணைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறிய அமின் பதான்,”பாஜகவில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளேன். கவுன்சிலராகவும், பல்வேறு வாரியங்களின் தலைவராகவும் இருந்துள்ளேன். ஆனால் பாஜகவில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பிரதமர் பதவி மதிப்புமிக்கது. அந்தப் பதவியில் இருப்பவர் கண்ணியமாகப் பேச வேண்டும். ஆனால் மோடி பேசும் பேச்சைக் கேட்கும்போது, அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? மணிப்பூர் பற்றி எரிந்தபோதும் அங்கு செல்லாதவர் பிரதமர் மோடி. அதன் முக்கியத்துவத்தை அவர் உணரவில்லை. மாறாக மணிப்பூரைவிட ராஜஸ்தானில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினார்கள். இது நல்லதல்ல”என குற்றம் சாட்டினார்.

முஸ்லிம் தலைவர் வெளியேறியதால் 
ராஜஸ்தானில் ஆட்டம் காணும் பாஜக 

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள், மூத்த 
தலைவர்கள் என பல்வேறு முக்கிய நபர்கள் பாஜகவின் மீதான அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அமித் பதான் பாஜகவின் முஸ்லீம் தலைவராக பார்க்கப்படுகிறார். மேலும் ஹஜ் கமிட்டி தலைவராக இருப்பதால் மாநிலம் முழு
வதும் முஸ்லீம் மக்களிடையே மட்டுமின்றி அனைத்து தரப்பி
லும் அவருக்கு போதுமான அளவில் செல்வாக்கு உள்ள நிலை
யில், அமித் பதான் பாஜகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. சொந்த கட்சி
யின் நிலைமை இப்படி ஆட்டம் காணும் நிலையில், பாஜக
வினர் அசோக் கெலாட் - சச்சின் பைலட்டின் முந்தைய மோதலை பேசி வீண் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.