ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் சமூகத்தின் முக் கிய அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா பிரி வின் தலைவர் சுக்தேவ் சிங் கோக மேடி செவ்வாயன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுகதேவ் சிங்கை கொலை செய்த வர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவரது குடும்பத்தினர், ராஜபுத் அமைப்பி னர் சடலத்தை வாங்க மறுத்து ஜெய்ப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முழுஅடைப்பு: வன்முறை
சுகதேவ் சிங் கொலையை கண் டித்து ஜெய்ப்பூர் மாநகர் பகுதியில் ராஜ்புத் சமூகத்தினர் மற்றும் கர்னி சேனா அமைப்பினர்கள் இணைந்து முழுஅடைப்பு அறிவித்து போராட் டம் நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய இடங்களில் ராஜபுத் சமூகத் தினர் டயர்கள், மரக்கிளைகளை சாலையில் தீ வைத்து கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு தனியார் பள்ளிகள், அலு வலகங்கள், வணிக மற்றும் தனி யார் நிறுவனங்கள் புதனன்று விடு முறை அளித்தன.
ஜெய்ப்பூர் புறநகரில் ராஜபுத் சமூகத்தினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவ தால் ராஜஸ்தானின் பிற மாவட்டங் கள் மற்றும் வெளிமாநில போக்கு வரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஜெய்ப்பூரில் பதற்றமான சூழல் நில வினாலும் காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பிக்காதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.