மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் கடந்த செவ்வாயன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைமையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு மாவட்டத்திலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கத்தின் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியுடன் வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.