states

img

70 கழுதைகளைத் திருடுகொடுத்த ராஜஸ்தான் தொழிலாளர்கள்!

ராஜஸ்தான், ஜன.1- ராஜஸ்தானில் ஹனுமன்கர் மாவட்டத்தில் 70-க்கும் மேற் பட்ட கழுதைகளைத் திருடு கொடுத்த தொழிலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், காவல்நிலை யத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில், கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருட்களை சுமக்க கழுதைகள் அதிகம் பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

இங் குள்ள மக்களின் வாழ்வாதா ரத்திலும் கழுதைகளின் தேவை முக்கியமாக உள்ளது.  இந்நிலையில், ஹனுமன் கர் மாவட்டத்தில் பொதி சுமக்க பயன்படுத்திய கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவை திருடுபோயுள்ளது.  இதுதொடர்பாக, கழுதை யின் உரிமையாளர்கள், கடந்த சில தினங்களில் வெவ்வேறு இடங்களில் 70-க்கும் மேற்பட்ட கழுதைகளைக் காணவில்லை என்று கூறி குய்யன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளனர்.

 ஆனால், கழுதைகள் தானே என பிரச்சனையை எளி தாக எடுத்துக்கொண்டு, காவல் துறையினர் விசாரணை நடத்த முன்வரவில்லை. புகாரையே ஏற்றுக்கொள்ளவில்லை. இத னால் கழுதை உரிமையாளர் கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் காவல் நிலையம் முன்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, கழு தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையில், 15 கழுதைகளைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர்.

அப்போது ஒரு சுவாரஸ் யமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, கண்டுபிடிக்கப்பட்ட கழுதைகளை அதன் உடமை யாளர்கள், ‘சிந்து’, ‘பிந்து’, ‘பப்லு’, ‘கல்லு’ என்று பெயர் சொல்லி அழைத்துள்ளனர். ஆனால், அந்தக் கழுதைகள் மறுமொழி தெரிவிக்காததை அடுத்து, ‘இவை எங்களுடைய கழுதைகள் அல்ல’ என்று கூறி பெற்றுக்கொள்ள மறுத் துள்ளனர். இதையடுத்து திருடு போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.